இடுகைகள்

ஜூலை, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - பட்டினத்தார் (பாகம் 2)

படம்
பட்டினத்தார்  (பாகம் 2) மாரிமைந்தன் சிவராமன் தராசின் இரு தட்டுக்களும்  சமமானதும்  சிவ சர்மர்  தம்பதியினரின் தெய்வக் குழந்தை பட்டினத்தார்  தம்பதியினரின்  வசமானது. அதே நேரம் தங்கத் தேர் ஒன்று தயங்கியபடி  வந்தது. அத்தேர் பட்டினத்தாரின் செல்வச்  செழுமையைக் காட்டும் திருத்தேர். சிவ சர்மரும் சுசீலையும் கண்ணீர் மல்க அமர பெரும் செல்வத்துடன்  திருவிடைமருதூர் நோக்கிப் பயணமானது. நன்றியோடு சில தூரம் பட்டினத்தார் தொடர்ந்து வர சிவ சர்மர் கைகள் தூக்கி வணங்கி விடை கொடுத்தார். பட்டினத்தார் அரண்மனையில் செல்வச் செழிப்போடு அன்போடு அருளோடு அக்குழந்தை வளர்ந்தது. 'மருதவாணர்' இறை பெயரே குழந்தைக்குச் சூட்டப்பட்டது. இறையே குழந்தை எனில் திரு விளையாடல்களுக்குக் கேட்கவா வேண்டும்! ஒருமுறை மற்ற சிறுவர்கள் சகிதம் மரக்கலப் பயணம். மருதவாணர்தான் தலைமை. நடுக்கடலில் திடுமென எழுந்த திமிங்கலம் ஒரு பையனை 'லபக்' எனப் பிடித்து ‘கபக்' என விழுங்கியது. சிறுவர்கள் துடித்தார்கள். பயந்து நடுங்கினார்கள். ''மருதவாணா... திமிங்கலம்'' எனக் கூக்குரலிட்டார்கள். மருதவாணர் எழுந்தார். திமிங்கலம் படக...

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - புலத்தியர்

படம்
புலத்தியர் மாரிமைந்தன் சிவராமன் அகத்தியர் பெருமானின் அகம் நிறை சீடர் புலத்திய பெருமான். அகத்திய முனி அருளிய பாடல்கள் சிலவற்றில் 'பாரப்பா புலத்தியனே! பண்புள்ளானே!' என்றே வரிகள் தொடங்கும். அந்த அளவிற்கு இருந்தது குரு - சீடர் உறவு. குருவைப் போலவே சீடர் புலத்தியரும் வைத்தியக் கலையில் வல்லவர். உலகம் சமநிலை அடைய அகத்தியர் பெருமான் தென்னாடு வருகையில் அவரோடு உடன் வந்தவர் புலத்தியர். அகத்தியர் பெருமானின் அருந்தவச் சீடராம் தேரையருக்குப் புலத்தியர் நெருக்கமிகு தோழர். தோழரெனினும் தேரையருக்கு ஞான உபதேசம் வழங்கி குரு போலவும் திகழ்ந்தவர் புலத்தியர். பூமியில் எவராலும் கூற இயலாது புலத்தியர் பிறப்பை எனப் பெருமை சேர்க்கிறார் போகர் பெருமான். இருப்பினும் புலத்தியர் பிறப்பு பற்றி ஒரு புராணச் செய்தி உண்டு. திரணபந்து என்றொரு அறம் செறிந்த மன்னன். அவனது தவச்சாலையில் தங்கி புலத்தியர் தவமிருந்து வந்தார். அரண்மனைப் பெண்கள் அங்கு அடிக்கடி வந்து ஆடியும் பாடியும் அமைதி கலைத்தனர். நீர் விளையாடி கேலியும் கிண்டலுமாய் தவச் சூழலைச் சிதைத்தனர். இதுவே நாளும் தொடர்ந்தது. தவத்திற்கு எழும் தடையில் எரிச்சலுற்றார் புலத்த...

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - புலிப்பாணி சித்தர்

படம்
புலிப்பாணி சித்தர்  மாரிமைந்தன் சிவராமன் போகருக்கு இணையான யோகர் எவருமில்லை. சித்தர்களில் சிறந்தவர் போகர் பெருமானே. அப்படிப்பட்ட போகரின் ஞான வழித் தோன்றலே புலிப்பாணி சித்தர், போகரின் சீன வாழ்வு சிறப்புமிக்கது. குரு காலாங்கி நாதரின் கட்டளையை ஏற்று சீனாவிற்குச் சென்று சீன மக்களுக்கென வாழ்ந்தவர் போகர். சீன மக்களை உயர்த்தியவர். சீன நாட்டை மேம்படுத்தியவர் போகர். சீனாவிலிருக்கும் போது அவருக்குக் கிடைத்த அற்புதச் சீடரே புலிப்பாணி. சீன நாட்டின் 'யூ' எனும் இளைஞன் போகர் மொழி கேட்டு அவரது சீடரானான். அடிக்கடி உலகம் சுற்றும் போகர் உலகில் தான் கண்டதைச் சுவைபடக் கூறுவார். அவரது உரை கேட்டு மறை மொழி கேட்டு அவரைச் சிக்கெனப் பற்றிக் கொண்டான் சீடன் 'யூ'. ஒருமுறை காய கற்பத்தைத் தான் மட்டும் உட்கொண்டால் போதாது எனத் தன்னுடன் எப்போதுமிருக்கும் நாய்க்கும் கூடவே இருக்கும் சீடர்களுக்கும் தந்தார் போகர் முனி. உட்கொண்ட நாய் உடனே செத்து விழுந்தது. அடுத்து எடுத்துக் கொண்ட 'யூ' வும் அரை நொடியில் மரணித்தான். இதைக் கவனித்திருந்த சீடர்கள் 'விட்டேன் சவாரி' என அடுத்த வினாடி ஓடி மறைந்தனர். எல்...

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கொங்கணர்

படம்
கொங்கணர்  மாரிமைந்தன் சிவராமன் சித்தர்களில் சிறந்தவர் கொங்கணர். அகத்தியர் திருமூலர் போகர் கொளதம மகரிஷி திருமழிசை ஆழ்வார் திருமாளிகைத் தேவர் என மூத்த சித்தர்களின் குருவருள் பெற்றவர். குறிப்பாக ஈடிணையற்ற திருமாளிகைத் தேவரிடம் தீட்சை பெற்று நிறைவடைந்தவர். கொங்கணரின் வரலாறு சுவாரஸ்யமானது. அடிப்படையில் அம்மன் பக்தர் கொங்கணர். அம்மன் வழிபாடே அவருக்கு அனைத்துமாய்த் திகழ்ந்தது. பொதுவாக சக்தியே தாயே அன்னையே என சித்தர் பாடல்களில் அம்மன் வழிபாடு அதிகமாயிருக்கும். கொங்கணர் மாரியம்மன் பக்தர். மாரி மைந்தன். கொங்கணரின் அவதாரத் தலம் கொங்கண நாடு. வட கேரளா கர்நாடகத்தின் சில பகுதிகள் மராட்டியத்தின் மேற்குக் கரையோரப் பகுதிகள் இணைந்ததே கொங்கண நாடு. தமிழகத்தில் கொங்கு நாட்டில் தாராபுரம் அருகே ஊதியூர் எனும் சிற்றூர். ஊதிய மலையில் கொங்கணர் பிறந்தார் என ஒரு வரலாறு உண்டு. இரும்பை உருக்கிக் கலன்கள் தயாரித்து சிவன் கோயிலில் விற்பது இவர் பெற்றோர் மேற்கொண்டிருந்த குலத் தொழில். அழகிய சிறுவனாய் கொங்கணர்  சிரித்து மகிழ்ந்து விளையாடிய போதும் அவர் சிந்தையில் எப்போதும் அம்பிகை இருந்தாள். இளைஞராய் வாலிபராய் வலம் ...