இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - யூகி முனிவர்

படம்
யூகி முனிவர் மாரிமைந்தன் சிவராமன் யூகி முனியை அறியும் முன் ஓர் எளிய அறிமுகம். சித்த மருத்துவத்தில் வல்லவர் தேரையர். தேரையரின் குரு அகத்தியர். மருத்துவத் துறையில் அகத்தியரையே விஞ்சியவர் தேரையர். தேரையரின் மனதுக்கினிய சீடரே யூகி முனி. மருத்துவத்தில் மகத்துவம் நிறைந்தவர் என்பதாலேயே தேரையருக்கு யூகியை நிரம்பப் பிடிக்கும். யூகி முனியின் ஆய்வுகள் ஆவணங்கள் சித்த மருத்துவத்தின் பொக்கிஷங்கள். யூகி முனி அருளிய வீர சுண்ணம் என்ற மருத்துவ நூல் ஒப்புயர்வற்றது. யூகியை மெச்சும் தேரையர் ஒருமுறை விரும்பி தனது குரு அகத்தியரிடம் சீடர் யூகியை அறிமுகம் செய்தார். அகத்தியர் பெருமானும் யூகி முனிவரும் மருத்துவ உலகை அலசி மகிழ்ந்தனர். 'வீர சுண்ணம்' நூலை அகத்தியரிடம் வழங்கினார் யூகி முனி தேரையர் முன்னிலையில். சுண்ணம் பற்றி ஆவலாய்க் கேட்டார் அகத்தியர் பெருமான். சுற்றும் முற்றும் பார்த்தபடி தவ வலிமையால் ஆங்கொரு காகத்தை வரவழைத்தார். அக்காகத்தை அருகில் அழைத்தார். தாவித் தாவி காகம் வந்தது. அதனிடம் சுண்ணத்தைத் தந்தார். யூகி. என்னாகும் என அகத்தியர் யோசித்துக் கொண்டிருந்த கணத்தில் சுண்ணத்தை உண்ட கரும் காகம் வெள்ளை...

தண்டியடிகள் நாயனார் புராணம்

படம்
63 நாயன்மார்கள் வரலாறு தண்டியடிகள் நாயனார் புராணம் சோழவள நாட்டில்  திருமகள் வழிபட்ட பேறு பெற்ற ஊர்  திருவாரூர். திருமால்  உரிமையுடன் பூசித்த  செல்வத் தியாகர்  எழுந்தருளியுள்ள  புண்ணியத் தலமும்  திருவாரூரே. அவ்வூரில்  ஒரு சிவனடியார். தண்டியடிகள்  அவர்தம் பெயர். இரு கண்களிலும்  பார்வை இழந்தவர். புறக்கண்  இல்லாதிருப்பினும்  சதாகாலமும்  வேதங்கள் ஓதியபடி  சிவபிரானின்  திருவடிகளை  அகக் கண்ணால்  கண்டு களிக்கும்  சீரிய சிவபக்தர். அவர் புறக்கண்ணே  விரும்பாதவர் போல்  பிறந்ததிலிருந்தே  காணுவதற்குரிய  நெற்றிக்கண்  உடையோனை  மனக்கண்ணால்  காணப் பெறுவதே  மெய்த் தொண்டு  எனக் கருதி  வாழ்ந்து வந்தார். அனுதினமும்  அகம் நிறைந்த  ஆதி பகவனை  திருவாரூரில்  புற்றிடம் கொண்ட  புனிதனைப்  போற்றியபடி  தேவாசிரியன்  மண்டபத்தை  மனம் குளிரக்  கடந்து 'நமசிவாய'  என்னும்  ஐந்தெழுத்தை  பேரன்போடு ஓதியபடி  வணங்கி நெகிழ்...

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - பதஞ்சலி முனிவர்

படம்
பதஞ்சலி முனிவர் மாரிமைந்தன் சிவராமன் பல இடங்களில்  பல படங்களில்  நாம் தரிசிக்கும் பதஞ்சலி முனிவரின்  தோற்றம் வித்தியாசமாய்  இருக்கும். இடுப்புவரை  மனித உடல். இடுப்புக்குக் கீழே  நாகத்தின் உடல். தலைக்கு மேலே  ஐந்து தலை நாகம்  குடைபோல இருக்கும்.  இவர்  ஆதிசேஷன்  அம்சம் என்பதால்  வாயில்  கோரைப் பற்கள்  இருக்கும். பதஞ்சலி முனிவரின்  திவ்விய சரித்திரமும் வித்தியாசமானது. சுவாரசியமானது. இன்று உலகெங்கும் சிறந்து  விளங்கிக்  கொண்டிருக்கிற யோகக் கலையை அன்றே  விளக்க வந்த மாமுனியே  பதஞ்சலி. யோகத்தின்  அடிப்படை  ஆதார நூலான 'யோக சூத்திரம்' என்ற நூலை அருளுவதற்கே  அவதரித்தவர் பதஞ்சலி முனிவர். பத்துத் தலங்களில் சமாதியானவர் பதஞ்சலி முனிவர் என்கின்றன வடநாட்டு யோக நூல்கள். இது சாத்தியமா என வியப்போருக்கு சத்தியமே என்கின்றன அந்நூல்கள். சித்தர் பெருமான்களுக்கு எல்லாமே சாத்தியம். வியத்தகு சக்திகள் முக்திகள் சித்திகள் சாத்தியமே. இறைநிலை அடைந்தவர்கள் இறையாய் இருப்பவர்கள் சித்தர்கள். அவர்கட்கு எதுவும் சாத...