இடுகைகள்

மே, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சிவவாக்கியர் (பாகம் 1)

படம்
சிவவாக்கியர் பாகம் 1 -மாரிமைந்தன் சிவராமன் சித்த பெருமான்களில் சிறந்தவர் சிவ வாக்கியர். சித்தர்களில் அதிகளவு அதிஞானப் பாடல்களைப் புனைந்தவர் சிவவாக்கியரே. அனல் பறக்கும் சொற்கள் புரட்சிக் கனல் தெறிக்கும் சாடல்கள் சிவ வாக்கியர் சிறப்பைச் சொல்லும். பிறக்கும் போதே 'சிவ சிவ’ என மழலை மொழியில் மயங்க வைத்தவர் என்பதால் சிவவாக்கியர் எனப் பெயர் வந்தது. பேசிய முதல் சொல் 'சிவ' நாமம் என்பதால் சிவவாக்கியர் எனவும் சொல்வர். பாடல்களில் 'சிவ சிவ' என இறைப் பெயரை அதிகம் பதிய வைத்ததால் பரமனின் பெயராய் சிவவாக்கியர் என்றானது என்போரும் உண்டு. சிவனே வாக்கு அளித்ததால் சிவவாக்கியர் எனப் பெயர் வந்தது என்கின்றனர் சிலர்.  தை மாதம் மக நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் சிம்ம ராசியில் அவதரித்தார் சிங்க நிகர் சிவவாக்கியர். அந்தணர் குலத்தில் தோன்றிய அற்புத மகான் சிவவாக்கியர். தந்தையும் தாயும் வள்ளல் தன்மையில் ஊர் போற்ற வாழ்ந்தவர்கள். மண் சிலை செய்வது அவர்தம் தொழிலாம். பெற்றோர் அறத்தின்  பயனாய் அருந்தவத்தின்  பலனாய் அவதரித்தவரே சிவவாக்கியர். ஆன்மிகப் பற்றும் தேடல் நிலையும் நிறைய இருந்தது என்பதைத் தவிர சிவவாக்...

திருநீலகண்ட நாயனார் புராணம் (பாகம் 3)

படம்
  63 நாயன்மார்கள் வரலாறு திருநீலகண்ட நாயனார் புராணம் (பாகம் 3) குளத்தில் நீலகண்டரும்  அவர் மனைவியும் உடல் நனைந்து நிற்க.. யோகியின் குரல் விண்ணதிர.. குளத்தைச் சுற்றி இருந்தோர் அமைதி காத்து அடுத்து  நடப்பதைக் காணக் காத்திருந்தனர். நீலகண்டரே  அந்த அமைதிச்  சூழலை உடைத்தார். "சுவாமிகளே...! வேத விற்பன்னர்களே..!  பஞ்சாயத்தாரே..! பொது மக்களே...! எனக்கும் என் மனைவிக்கும் ஓர் ஒப்பந்தம்  உள்ளது.  அது ஒரு  சத்திய விரதம். இளம் பருவத்தில்  ஒருமுறை இல்லாள் விடுத்து  அன்னியப் பெண்ணொருத்தி உடல் தொட்டேன். செய்தியறிந்த என் மனையாள் அடுத்த கணமே 'எம் உடல் தீண்டாதே... திருநீலகண்டம்' எனச் சத்திய வாக்கு  சொல்லி  விலகி விட்டார். நானும் தவறு உணர்ந்து உடலால்  எப்பெண்ணையும்  தீண்டாது உளத்தால் திருநீலகண்டரை  மட்டும் தீண்டியபடியே வாழ்ந்துவிட்டேன்  இத்தனை காலமும். ஊருக்கும் உலகுக்கும்  தெரியாது காத்த இந்த ரகசியத்தை  இத்தனை காலம் கழித்து  உரைக்க  வேண்டியதாயிற்று. உரக்கச் சொல்ல  வேண்டியதாயிற்று." கண்ணீர் பெருக த...

திருநீலகண்ட நாயனார் புராணம் (பாகம் 2)

படம்
  63 நாயன்மார்கள் வரலாறு திருநீலகண்ட நாயனார் புராணம் (பாகம் 2) பழுத்த யோகி உடல் முழுக்கத் திருநீறு. பேச்சும் மூச்சும் 'சிவ சிவ' என நா அசையா முழக்கம். வீதியில் நடந்து வந்த  அந்த யோகியின் நெற்றியில் திருநீற்றுப் பட்டை, கழுத்தில் ருத்ராட்சக் கொட்டை. புலன்கள் முழுக்க  திருநீலகண்டம் என வாழும் நீலகண்டர் இல் முன் நின்றார் அந்த யோகி. நீலகண்டருக்கு எல்லையில்லா  மகிழ்ச்சி. கையும் ஓடவில்லை.  காலும் ஓடவில்லை. மனது மட்டும்  எட்டுக்கால் பாய்ச்சலில் குடிசை முன் நின்ற  சிவனடியாரை நெருங்கி அவரை  யோகியின் காலடி  விழ வைத்தது. "சுவாமி..... என்னே என் பாக்கியம்! உள்ளே வாருங்கள்" பாதாபிஷேகம் செய்து  விழுந்து வணங்கி உள்ளே  அழைத்துச் சென்றார் உள்ளமெல்லாம்  பூரிப்புடன். யோகியார் ஆசி தந்தார். இறையருளும் கூடும் என்றார். பின் வந்த காரியத்தை மெலிதாகச் சொன்னார். "அப்பனே! நான் கொஞ்ச காலம் தேச சஞ்சாரம்  செய்கிறேன். வர நாளாகும். என்னிடம் இருக்கும் இந்தத் திருவோடு ஈடு இணையற்ற  அருளாற்றல் மிக்கது.  உள்ளே வைக்கும் எப்பொருளையும் சக்தி மிக்கதாக  ...

திருநீலகண்ட நாயனார் புராணம் (பாகம் 1)

படம்
  63 நாயன்மார்கள் வரலாறு திருநீலகண்ட நாயனார் புராணம் (பாகம் 1) சிதம்பரத்தில் ஒரு சிவபக்தன். பிறப்பாலும் தொழிலாலும் அவன் ஒரு குயவன். மண்பானை செய்து  விற்பது அவனது ஜீவனத் தொழில். அவனுக்குப் பிடித்த சிவ தொழில் ஒன்று உண்டு. சிவனடியார்களைக் கண்டால் விடமாட்டான்.  அடி தொழுவான். அவரைத் தன் குடிசைக்கு  அழைத்து வந்து  உபசரிப்பான். பரமசிவனே  விஜயம்  புரிந்தது போல்  பரவசம் அடைவான். புளகாங்கிதம்  கொள்வான். அவன் மணந்த மங்கை நல்லாளோ அவனினும்  மிக்க அன்பரசி. சிவனடி தொழும்  மாதரசி. அடியார் போற்றும்  கற்பரசி. காலை எழுந்தவுடன்  முதலில்  ஒரு திருவோடு  செய்வது அவன் வழக்கம். இல்லம் வரும்  சிவனடியாருக்கு உள்ளம் போற்றும்  அத்திருவோட்டை  வழங்கி வழியனுப்புதல் அவனது இறைக் கொள்கை. இறையருளால் இளமை ததும்பி நின்ற இருவரும் இல்வாழ்க்கையிலும்  குறை வைக்கவில்லை. அக்கம்பக்கத்தார் பொறாமை  கொள்ளும் அளவுக்கு அத்தனை அன்யோன்யம். சிவன் மீது கொண்ட  அளவற்ற பக்தியால்  அவன்  பரமசிவன் என்றோ உலவும் ஆயிரமாயிரம் திருநாமங்க...

உருத்திர பசுபதி நாயனார் புராணம்

படம்
  63 நாயன்மார்கள் வரலாறு உருத்திர பசுபதி நாயனார் புராணம் காவிரி பாயும்  சோழவள நாட்டில்  ஆன்மிக வளம்  நிறையப் பெற்ற  திருத்தலம்  திருத்தலையூர். மறை ஓதும்  வேதியர்கள்  நிறைந்த ஊர்  என்பதால்  சதாகாலமும்  தவ ஒளியும்  சிவ மணமும்  ஓங்கி  உலகளந்து  இருக்கும். வேத மந்திரங்கள்  காற்றோடு கலந்து  விண்ணோடு சேர்ந்து  மழை நன்கு பொழியும்.  தாமரைத் தடாகங்களும்  நறுமணச் சோலைகளும்  சிவ வேள்விகளும்  தலப் பெருமை சொல்லும். திருத்தலையூர் மக்கள்  திருவருள் சிந்தனையோடு  இரவும் பகலும்  திளைத்திருப்பர்.  தர்மமும் நீதியும்  அம்மக்களின் கண்களாகக்  காட்சியளித்ததால்  கடவுளின் பார்வையும்  அவ்வூரில்  எந்நேரமும்  நீக்கமறப்  பதிந்திருக்கும். அவனன்றி  ஓர் அணுவும்  அசையாதே! வேதம் ஓதும்  வேதியர் குலத்தில்  ஒரு வேத மகான்  அவதரித்தார். அவரின் திருநாமமே  உருத்திர பசுபதி நாயனார். அவரது பெயர்  ஒரு காரணப் பெயர். உருத்திர மந்திரத்தை...

முருக நாயனார் புராணம்

படம்
63 நாயன்மார்கள் வரலாறு முருக நாயனார் புராணம் காவிரிசூழ் நாடான சோழ நாட்டில்  திருப்பூம்புகலூர்  என்ற திருத்தலம். இந்தச் சிவத்தலத்திற்கு  திருப்புகலூர்  என்ற பெயரும்  உண்டு. மூவர் தேவாரம்  பெற்ற இடம்.  அப்பர் சுவாமிகள்  முக்தி பெற்ற தலம். சுந்தரமூர்த்தியாருக்கு  இறையனார்  செங்கல்லைப்  பொன்னாக்கித் தந்த தலம்  எனப் பற்பல பெருமைகளைக் கொண்ட தெய்வாம்சம்  நிறைந்த  சிவத்தலமே  திருப்புகலூர். திருப்புகலூரின்  திருப்புகழைச்  சேர்க்கத்  தனிக் கோயில்  கொண்டிருக்கும்  சிவனின் திருநாமம்  வர்த்தமானீஸ்வரர். சோழ நாட்டைப்  போலவே  இக்கோயிலும்  நீர் சூழ்ந்திருக்கும்  பெருமை கொண்டது. அங்கு வந்து  இறைவனைத்  தரிசித்துச் செல்லும்  சிவனடியார் கூட்டம்  ஏராளம்....  ஏராளம்.  அவர்கள்  நெற்றிமுதல்  உடலெங்கும் பூசும்  திருநீறு  தாராளம்....  தாராளம்.  திருப்புகலூரில்  வாழ்வாங்கு வாழ்ந்த  சிவனடியார்களில்  முதன்மையானவர் ...