இடுகைகள்

ஆகஸ்ட், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - மச்சேந்திரரர்-கோரக்கர்-பிரம்மமுனி (பாகம் 2)

படம்
  மச்சேந்திரர்-கோரக்கர்-பிரம்மமுனி  (பாகம் 2) மாரிமைந்தன் சிவராமன் பிரம்மமுனி கோரக்கரின் இதய நண்பர். இருவருக்கும் இருந்த கருத்தொற்றுமை சித்தர் உலகம் சந்தித்திராதது.  வரத மேடு என்ற காட்டுப் பகுதியே அவர்களின் அப்போதைய வாசஸ்தலம். இருவருக்கும் ஒரு யோசனை வந்தது. 'சித்திகள் யாவும் ஒன்றன் பின் ஒன்றாய்க் கூடி வருகிறது. அடுத்து... பாக்கியிருப்பது தெய்வ நிலை ஒன்றே. படைத்தல் காத்தல் மறைத்தல் ஒடுக்கல் அருளல் என்னும் ஐந்தொழிலே இனி சித்தியாக வேண்டும். அதற்கு ஒரே வழி யாகம். யாகம்  செய்வோம்.' தெய்வமாதல் என்பது எளிய விஷயமா? குறைகள் எதுவும் இன்றி முறைப்படி யாகம் நடந்தது. யாக குண்டத்தில் எழுந்த புகை யோகம் தர எத்தனித்தது.  அதற்கு இறைவனின் கருணை அவசியமன்றோ! கோரக்கர் பிரம்மமுனியின் யாகக் கூட்டணியில் மனத்தூய்மை இருந்தது. யாகப் பொருட்களில் கூட தூய்மை இருந்தது. ஆனால் யாகத்தின் நோக்கத்தில் தூய்மை இல்லை. இறைவன் போல்  ஆகவேண்டும் என்பது இறுதி நிலை. பேராசைப் பெருநிலை! அதற்கு இவை போதாது. இறைவனே விரும்ப மாட்டார். பொதுவாக யாகம் தடைப்பட தடைகள் தேடி வரும். வந்தது. யாகத் தீயிலிருந்து இரண்டு ப...

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - மச்சேந்திரரர்-கோரக்கர்-பிரம்மமுனி (பாகம் 1)

படம்
  மச்சேந்திரர்-கோரக்கர்-பிரம்மமுனி  (பாகம் 1) மாரிமைந்தன் சிவராமன் சித்தர்கள்  கோரக்கர்  மச்சேந்திரர்  பிரம்ம முனி மூவரின்  திவ்விய சரித்திரம் ஒன்றோடொன்று தொடர்புடையது. எனவே மூவரின்  திவ்விய  சரித்திரத்தையும் ஒன்றாகவே  தரிசிப்போம். கோரக்கர் சரித்திரம் ஒரு பெரிய சமுத்திரம். அவர் பிறப்பே விசித்திரம். சக சித்தர்களுக்கு உற்ற நண்பராய் ஞான குருவுக்கு ஏற்ற சீடராய் வலம் வந்தவர் கோரக்கர். அவர் பிறப்பு மட்டுமல்ல வார்ப்பும் அபூர்வமானது. அமைதியானது. காய கற்பத்திற்கு உகந்த மருந்தென கஞ்சாவையும் புகையிலையையும் சிபாரிசு செய்யும் பின்னணியில் இருக்கும் சித்தர்கள் இருவர். அவர்களில் ஒருவர் கோரக்கர். கோரக்கர் திவ்விய சரித்திரத்தில் மச்சேந்திர முனிவரின் கதையும் அடக்கம். பிரம்ம முனியின் உறவும் அடக்கம். கோரக்கர் உருவாய் நடமாடிய காலத்தில் குரு மச்சேந்திரருடன் இருந்த காலமே அதிகம். அது பெரும் பகுதி எனச் சொன்னால் அதில் ஒரு பாதி சக சித்தர் பிரம்ம முனியுடன் சேர்ந்திருந்த நாட்களும் தவத்தில் தம்மைத் தொலைத்த நாட்களும் அடங்கும். பிரம்ம முனியையும் கோரக்கரையும் எப்போதும் ஒன்றாக...