இடுகைகள்

ஏப்ரல், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 1)

படம்
  போகர் பிரான் (பாகம் 1) -மாரிமைந்தன் சிவராமன் போகர் காலாங்கி நாதரின் முதல் மாணவர். சித்தர்களில் முக்கியமானவர். கொங்கணர் கருவூரார் இடைக்காடர் சட்டைமுனி புலிப்பாணி ஆகியோர் போகருடன் கூடவே பயணித்த சீடர்கள். நந்தீசர் சுந்தரநாதர் மச்சமுனி  கமலமுனி திருமாளிகைத் தேவர் ஆகியோரும் போகரின் சீடர்களே என்பாரும் உண்டு. 'மெய்வழி கண்டவர்' என்று திருமூலரால் அவருக்கு ஒப்ப போற்றப்பட்ட பேறு பெற்றவர் போகர் பிரான். மற்றைய சித்தர்களை விட  மக்கள் நலனில்  மனத்தைச் செலுத்தியவர்.  மக்கள் சேவையே  மகேசன் சேவை என்று வாழ்ந்தவர். சீரிய விஞ்ஞானி. வேதியல் துறையில் வித்தகர். இயந்திரவியலில் முதல் ஞானி. அனைத்துக்கும் மேலாய்த் தமிழ்ச் சித்தர். சீன தேசத்தில் துணி விற்கும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் போகர் பிரான். மழலைக் குழந்தையே ஞானம் பேசியது. சின்னஞ் சிறு வயதில் மந்திரம் சொன்னது. விசித்திரமாய் உபதேசம் செய்தது. ஊரார் வியந்தாலும் தாய் விசனமடைந்தாள். குழந்தைக்குப் புத்தி பேதலித்துவிட்டது என நாளும் அழுதாள். கண்ணீரைத் துடைத்து கண்மணி சொல்வான். "அம்மா... கவலைப்படாதே!  நான் மற்றவர் போல் சாதாரணக...

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - இராமதேவர் எனும் யாகோபு சித்தர்

படம்
  இராமதேவர் எனும் யாகோபு சித்தர் -மாரிமைந்தன் சிவராமன் சித்தர்கள் இனம் மொழி நிறம் நாடு சமயம் சாதி கடந்தவர்கள். சமரச சன்மார்க்கமே அவர்கள் சமயம். சித்தர் தத்துவமே அவர்கள் மதம். சாதிகளைக் கடந்து சாதித்தவர்கள் அவர்கள். பற்பல  சித்துக்களையும் இறை  நிலைகளையும் போதித்தவர்கள்  அவர்கள். மதமாற்றம்  என்னும் சொல் புழக்கத்தில் இல்லாத  காலத்திலேயே மதம் மாறி மக்கள் நலன் பேணிய  சித்தர்கள் உண்டு. இராமதேவர் எனும் சித்தர் பிரானே மதமாற்றம் கண்ட முதல் சித்தர். இதற்காக நாடு விட்டு நாடு சென்ற நல்மகான் அவர். கூடுவிட்டுக் கூடு பாயும் கலையின் வித்தகர் அவர். நாடு விட்டு  நாடு செல்ல அவர்  கையாண்டது சித்தர் முறையே. ஆகாய மார்க்கத்தில் அதிரடி வேகத்தில் எங்கும் செல்பவர் அவர். அரேபியர்களின் மனங்களை வென்றவர். மருத்துவத் துறையில் அவர் ஒரு வித்தகர். சித்த மருத்துவத்தின் சிகரம் தொட்டவர். யுனானி  மருத்துவத்திற்கு வழிகாட்டியவர். யுனானியிலும் சித்த மருத்துவத்திலும் வல்லவரான இராமதேவர் தமிழிலும் அரபியிலும் பல படைப்புகள்  அருளிய அருளாளர். புலத்தியரின் சீடர். சட்டைமுனி காலாங்...