சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - தன்வந்திரி
தன்வந்திரி
மாரிமைந்தன் சிவராமன்
ஆயுள் வேதமே
ஆயுர்வேதம்.
ஆயுர்வேதம்
ஓர்
இயற்கை மருத்துவம்.
சித்த மருத்துவம்
தமிழின் கொடை.
அகத்தியர் பெருமானே
ஆதார நாயகன்.
அகத்தியரும்
தேரையரும்
யூகி முனிவரும்
அதிகமாய்
அருளினார்கள்.
ஆயுர்வேதத்தின்
பிதாமகன்
தன்வந்திரி.
அகத்தியர்
வடநாட்டவர்.
தமிழ் கற்று
சித்த மருத்துவம்
அருளினார்.
தன்வந்திரி
தமிழ்நாட்டவர்.
வடமொழிப்
புலமையில்
வடநாட்டாரை
விஞ்சியவர்.
தமிழின்
சித்த வைத்தியத்தை
வடமொழியில்
வழங்கி
"தன் வந்திர்"
என்ற
நிகண்டாக்கினார்.
நிகண்டாக்கிய
அந்நூலை
அருளியதாலேயே
தன்வந்திரி
என்ற
காரணப்பெயரும்
பெற்றார்.
வாகட
நூலில்
வல்லவரான
தன்வந்திரி
மகாவிஷ்ணுவின்
அம்சம்.
மகாவிஷ்ணுவின்
மறு அவதாரமே
தன்வந்திரி
என்பர் சில
ஆய்வர்.
இவரது
பிறப்பு
பற்றி
சில சுவையான
குறிப்புகள் உண்டு.
தேவர்களும்
அசுரர்களும்
பாற்கடலைக்
கடைந்த போது
அமுதக் கலசத்துடன்
அவதரித்தார்
தன்வந்திரி
என்கிறார்
போகர் பெருமான்.
தீர்க்கதமர்
என்பவரின்
மகனாய்ப் பிறந்தவர்.
காசிராஜன்
புதல்வனாய்த்
தோன்றியவர்.
தீர்த்தப்பசு
என்பவரின்
திருமகனே
தன்வந்திரி.
அப்பிறப்பில்
அவர் பெயர்
சேதுமான்.
இவரே
சுசுருதருக்கு
ஆயுர்வேதம்
உபதேசித்தவர்.
தன்வந்திரியின்
மகன் 'சேதுமான்'
என்கிறது
அபிதான சிந்தாமணி.
அனு என்ற
அரசனின்
வாரிசாய்ப்
பிறந்து
பரத்துவாசரிடம்
ஆயுர்வேதம்
கற்று
அதை
எட்டு வகையாகப்
பிரித்து
உபதேசித்தார்.
இவ்விதம்
பலவிதப் பிறப்பும்
பற்பல செய்திகளும்
உண்டு.
அகத்தியர் மாமுனி
ஒரு படி மேலே
போய்
தன்வந்திரி
விஷ்ணுபகவான்தான்
எனச்
சத்தியம் செய்கிறார்.
முற்பிறப்பில்
விஷ்ணு பிரானாக
வலம் வந்ததால்
மனிதனாகப்
பிறந்ததே
ஆயுர்வேதத்தை
அகிலத்திற்கு
அளிக்கத்தானாம்.
அவர்
தந்தை
அளிக்கத்தானர்.
தம்புராவுடன்
பாடிச் சென்று
யாசகம்
பெற்றே
தன்வந்திரியை
வளர்த்தார்.
அவரே
சகல
சாத்திரங்களையும்
கற்பித்தார்.
பதினெட்டு
சித்தர்களும்
தன்வந்திரிக்கு
உபதேசித்துள்ளார்கள்.
மூன்று
லட்சம்
கிரந்தங்களையும்
சித்தர்கள்
உபதேசித்தனர்.
ஞானம்
பெற்று
ஞானியானார்
தன்வந்திரி.
அவர்
சூரியன் போல்
பிரகாசித்தார்
என்கிறார்
அகத்தியர் பெருமான்.
ஒரு கையில்
அமிர்த குடம்.
மறு கையில்
கதை.
இதுவே
தன்வந்திரியின்
கோலம்.
ஆதி சித்தர்
நந்தீசரின்
சீடர்.
விக்கிரமாதித்தன்
சபையில்
'நவரத்தினம்'
என்ற
பட்டம்
பெற்றவர்.
பண்டிதர்
குழுவில்
பணியாற்றியதாக
செய்தி உள்ளது.
தன்வந்திரி
அருளிய
நூல்கள்
வைத்திய சிந்தாமணி
வைத்திய காவியம்
நூறு காண்ட ஞாலம்
கலை ஞானம்
ஜெயம் தைலம்
சிமிட்டு ரத்தினச் சுருக்கம்
கடுக்கிடை
நிகண்டு
வைத்தியம்
தண்டதம்
கருடாரூடம்
செயநீர்
முப்பு சூத்திரம்
உள்ளிட்ட பல.
ஐப்பசி மாதம்
புனர்பூசம்
4-ஆம் பாதத்தில்
அவதரித்தவர்
தன்வந்திரி.
அவர்
800 வருடம்
32 நாட்கள்
வாழ்வாங்கு
வாழ்ந்தார்
என்கிறது
ஒரு குறிப்பு.
தன்வந்திரி
பற்றிய
தகவல்கள்
குறைவே.
வைத்தீஸ்வரன்
கோயிலில்
தன்வந்திரி முனி
லயமானார்.
வைத்தீஸ்வரன்
கோயிலில்
சிவபெருமான்
வைத்தியநாத சுவாமியாக
நாடி வரும் பக்தர்களுக்கு
நோய் தீர்த்து
அருளுவது கண்கூடு.
கோரக்க சித்தரின்
குறிப்பு
தன்வந்திரிக்கு
60 மனைவிகள்
160 மக்கட் செல்வங்கள்
என வியக்க
வைக்கிறது.
பலகோயில்களில்
தன்வந்திரிக்குப்
பிரதான
இடமுண்டு.
அங்கு தீராத நோய்
தீர்க்கும்
தெய்வமாகக்
காட்சி
அளிக்கிறார்.
நோய்
தீர்க்கும்
சிறப்பு மருத்துவரே
தன்வந்திரி
என்கிறது
ஆன்மிக உலகம்.
(தன்வந்திரி திவ்விய சரித்திரம் - நிறைவு)
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
கருத்துகள்
கருத்துரையிடுக