சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)
கருவூரார் (பாகம் 1) -மாரிமைந்தன் சிவராமன் சிற்பக்கலையில் சிறந்தோங்கிய கருவூரார் கருவூர் என்னும் ஆன்மீக பூமியின் தலைநகர். அங்கே ஆம்ராவதி என்னும் அமராவதி நதியின் கரை ஓரம். நதியில் நீராடி விட்டு கரைக்கு வருகிறார் ஒரு மகான். அவரை நோக்கி வருகிறது ஒரு வேதியர் கூட்டம். "அவனே தான் பிடியுங்கள்... அடித்துச் சாயுங்கள்... அழியட்டும் ! அற்பன் !" வன்மத்தோடு விரைகிறது வேதியர் கூட்டம். ஒரு கணத்தில் உணர்கிறார் மறு பிறப்பில்லாத அந்த மகான். அவருக்கும் உலகின் மீது வெறுப்பு தான். எது சொல்லியும் ஏற்காத மக்களிடம் ஏற்பட்டிருந்த வெறுப்பு. "இனி இவ்வுலகம் வேண்டாம்.." முடிவெடுக்கிறார் ஓட தொடங்குகிறார். உயிர் மீது அவருக்கேதும் விருப்பமில்லை. சிவப்பாதமே அவர் விருப்பம். ஏக இறைவனான சிவனை நாடி அவன் திருப்பாதம் தேடி ஓடுகிறார். கொலைவெறியில் வேதியர் கூட்டம் விரட்டுகிறது. ஓடி வந்தவர் ஆனிலையப்பர் ஆலயம் புகுகிறார். உள்ளே பரமன் பசுபதீஸ்வரர் சன்னதி அடைந்து மூலஸ்தானத்திலிரு...
ஓம் நமசிவாய 🙏
பதிலளிநீக்கு