இடுகைகள்

ஜனவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விறன்மிண்ட நாயனார் புராணம் (பாகம் -2) - மாரிமைந்தன் சிவராமன்

படம்
  விறன்மிண்ட நாயனார் புராணம் (பாகம் -2) சிவனையே கண்டித்த சிவனடியார் ஆழ்ந்து சிந்தித்தால்  ஓர் உண்மை  தெரியவரும். விறன் மிண்டர் தான் திருத்தொண்டர் தொகை  சுந்தரரால் அருளப்படுவதற்கும்  அதை ஒட்டி  சேக்கிழார் பெரியபுராணம்  படைப்பதற்கும் காரணகர்த்தா.  விறன் மிண்டர் கோபக் குரல்  எழுப்பி இராது இருந்திருந்தால் அடியார்கள் வரலாறு  கிடைத்திருக்காது. இது அருளாளன்  அருளிய விளையாட்டு. விறன்மிண்ட நாயனாரும்  சுந்தரமூர்த்தி நாயனாரும் கூத்தபிரான்  நடத்திய நாடகத்தின்  இருதுருவ நாயகர்கள். 'திருத்தொண்டர் தொகை'  இயற்றி முடித்த பின்னர் திருவாரூர் கோயிலின்  வடக்கு வாசலில்  காட்சியளித்து  விறன் மிண்டரின் சமகாலத்து அடியாரான சுந்தரமூர்த்தியாரின்  கரம் பற்றி கரை சேர்த்துக் கொண்டார் அருள் நிறை ஆதிமூர்த்தி. சுந்தரமூர்த்தி நாயனார்  அருள் பயணம் இவ்வாறிருக்க  சிவன் மீதே சினம் கொண்ட விறன் மிண்டர்  என்னவானார்  என்று பார்ப்போமா ? சுந்தரமூர்த்தி நாயனார்  திருவாரூர் கோயிலில்  தியாகேசுவரத் தேவரின் ...

விறன்மிண்ட நாயனார் புராணம் (பாகம் -1) - மாரிமைந்தன் சிவராமன்

படம்
விறன்மிண்ட நாயனார் புராணம் (பாகம் -1) சிவனையே கண்டித்த சிவனடியார் அடியார்க்கினியன் சிவபெருமானும்  அடியார்களைப் போற்றிய  சுந்தரர் பெருமானும்  சிவனே கதி என வாழ்ந்த  சிவனடியார்களும்  போற்றிய நாயனாரே  விறன்மிண்ட நாயனார். வேறெந்த நாயனாரும்  இவர் பெற்ற  இறை பெருமை  பெற்றாரில்லை. நில வளத்திலும்  நீர் வளத்திலும்  மலை வளத்திலும்  குடி வளத்திலும்  சிறந்த நாடு  மலை நாடு. அதற்கு வேறு  ஒரு பெயர் உண்டு.  அது சேரநாடு.  இன்னும் ஓர்  இனிய பெயரும் உண்டு.  இயற்கை சூழ் 'இறைவனின் தேசமான'  கேரள நாடு. அந்த நாடு  உருவான கதை சுவாரசியச் செழுமையும்  புராணச் செறிவும் கொண்டது. ஜமதக்கினி முனிவரின்  அருந்தவப் புதல்வன்  பரசுராமன். அவனும்  ஒரு தவமுனிவன். ஆதி அந்தமில்லாத  அரனாரிடம்  ஒரு மழுவாயுதத்தை  வேண்டிப் பெற்றவன். மழு என்பது  அரிய விஷம்  தடவப்பட்ட  கோடாரி போன்ற போர் ஆயுதம். சூரனைச்  சம்ஹாரம் செய்ய  வீரவேலுடன் சென்ற  வேலாயுதன்  முருகப்பெருமான் ...