இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சோமாசி மாற நாயனார் புராணம்

படம்
63 நாயன்மார்கள் வரலாறு  சோமாசி மாற நாயனார் புராணம் மாரி மைந்தன் சிவராமன் சோழவள நாட்டில் மாஞ்சோலைகள்  நிறைந்த  புனித தலம் திருவம்பர். இவ்வூரில்  காட்டுமலை மேல்  ஒரு திருக்கோயில். இக்கோயிலில்  சிவலிங்கத்திற்குப்  பின்புறம் அம்மையப்பர்  திரு உருவம். இறையைப் பார்ப்பதற்கே  ஏகாந்தமாய்  இருக்கும். தரிசிப்பதற்குச்  சொல்லவே வேண்டாம். இறையாசி பெறுவதற்கு இணையற்ற கோயில். 'அம்பர்திருப்  பெருங்கோயில்  அமர்கின் றான்காண் ' என்கிறது தேவாரம்.  ஆம்.... பாடல் பெற்ற திருத்தலம் மாகாளம் பெருங்கோயில். கோசெங்கட்  என்னும் சோழ மன்னன் மாடக்கோயில்கள்  கட்டுவதில்  பேரார்வம் கொண்டவன். எழுபது மாடக்கோயில்கள்  கட்டியுள்ளான். முதலில் கட்டியது  திருவானைக்கா கோயில். முடிவாகக் கட்டியதுதான்  அம்பர் பெருந்திருக்கோயில். ஊர் சிறப்பும்  கோயிற் பெருமையும் ஒருங்கே கொண்ட  திருவம்பரில்  ஒரு சிவபக்தர். அந்தணர் குலம். பெயர் சோமாசியார். ஒரு சிவபக்தர்  நாயன்மாராக  பக்தி உயர்வு பெற முடியும்  என்பதற்கு உதாரண பு...

மூர்க்க நாயனார் புராணம் (பாகம் -2) - ஸ்ரீ நந்தீஸ்வரர் அருளியது

படம்
  63 நாயன்மார்கள் வரலாறு ஸ்ரீ நந்தீஸ்வரர் அருளிய மூர்க்க நாயனார் புராணம் ( பாகம் -2)   - மாரி மைந்தன் சிவராமன் இயற்கையாகவே ஜீவகாருண்யத்தில் சிறந்தோங்கிய தொண்டை நாட்டில் திருவேற்காடு திருத்தலத்தில் ஒரு வேளாளர் குடும்பம் .   குடும்பத் தலைவர் சங்கரன் . இல்லக்கிழத்தி தாட்சி .   இருவருக்கும் இரு குழந்தைகள் இருந்த போதிலும் இறைவனிடம் வேண்டிப் பெற்றனர் மூன்றாவது மகவை .   அவனுக்கு ஆசையாக பெயரிட்டனர் மாயோன் எனும் திருப்பெயரை .   பேருக்கு ஏற்றார் போல் நடைபயிலும் வயதிலேயே கொஞ்ச நேரம் அங்கு கொஞ்ச நேரம் இங்கு என்று வீட்டுக்குள்ளும் காடு கழனிக்குள்ளும் ஒரு கணத்தில் ஒளிந்து யார் கண்ணுக்கும் அகப்படாமல் மாயம் செய்வான் மாயோன் .   கல்வி சாலைக்கு அனுப்பினர் பெற்றோர் . ஏனோ கல்வி அவ்வளவாக வாய்க்கவில்லை .   ஆனால் அவன் வாய்த்துடுக்கு அறிவோடு இருந்தது .   ஐந்து வயதிலேயே வீட்டில் குவிந்திருக்கும் தானியங்களை எடுத்துச் சென்று நீரில் இருக்கும் மீன்களுக்கும் தரையில் தாவும் தவளைகளுக்கும் ஓடி ஒளியும...